பக்கம்:பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

175


இக்காலத்தினர் கிடங்கு என்பர். ஆவணம் அல்லது அங்காடி என்பது பண்டங்களை வைத்து வாணிகம் செய்யும் இடம். 81

"காவிரிப்பூம்பட்டினத்தில் இவை சிறப்புறஅமைக்கப்பட்டு எப்போதும் விழாக்கோலம் கண்டு காட்சியளித்தன" 82 என்கிறார் பட்டினப்பாலை ஆசிரியர்.

"நகரின் பெரிய கட்டடங்களுக்கு நெருக்கமாக அமைக்கப்பட்ட நீண்டபடிகள் இருந்தன. சுற்றுத் திண்ணைகள் பல இருந்தன. அந்தப் படிக்கட்டுகளின் வழியாகத்தான் அத்திண்ணைகளின்மேல் ஏற முடியும் முதல் கட்டு, இரண்டாங்கட்டு, மூன்றாங்கட்டு என்று சொல்லும்படி பல சுற்றுக் கட்டுகள் அமைந்திருந்தன.

சிறிதும் பெரிதுமான பல வாயில்கள் இருந்தன. பெரிய கதவின் நடுவே சிறிதாக இருந்த மற்றொரு கதவு திட்டி வாயில் (திருஷ்டி வாயில்) எனப்பட்டது. உள்ளே போகின்ற பல இடைவெளிகளும் இருந்தன. அந்த மாளிகைகள் மேகங்கள் படியக் கூடியவாறு ஓங்கி உயர்ந்திருந்தன. 82

அந்நாள்களில் கொடிகட்டிப் பறக்கவிடும் வழக்கம் கோயில்களிலும் திருவிழாக் காலங்களிலும் மட்டும் அல்லாமல் கடைவீதிகளிலும் இருந்திருக்கிறது. 83

பூம்புகார் நகரில் அறிஞர்கள் கூடி விவாதிக்கும் இடங்களில் கூடக் கொடி கட்டிப் பறக்கவிட்டிருக்கிறார்கள். 'இன்ன வணிகந்தான் இங்கு நடக்கிறது’ என்பதை அங்கே பறக்கும் கொடி மூலமே அறியும் வகையில் பூம்புகார் நகரில் கொடிகள் பறந்தன. கொடிகளின் அடையாளத்தைக் கொண்டே இது இன்ன இன்ன நாட்டுக் கப்பல்-இன்ன இன்னாருடைய கப்பல் என்று அறிந்து வந்தனர் மக்கள். 84