204
பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்
ஆ. மதுரை மாடங்களும் கோட்டை வாயிலும்
மாடம் பிறங்கிய மலிபுகழ்க் கூடல் 82
மழையாடு மலையின் நிவந்த மாடமொடு
வையை அன்ன வழக்குடை வாயில் 83
மலைபுரை மாடத்துக் கெழு நிழல் இருத்தர 84
இ. பல சாளரங்களை உடைய வீடுகள்
வகை பெற எழுந்து வான மூழ்கிச்
சில்காற் றிசைக்கும் பல்புழை நல்லில்
யாறு கிடந்தன்ன அகல் நெடுந்தெருவில் 85
ஈ. ஓவியம் போன்ற வீதியமைப்பு
ஒவுக் கண்டன்ன இருபெரு நியமித்து
சாறயர்ந் தெடுத்த உருவப் பல்கொடி 86
கடைவீதியின் கொடிகள் உயர்ந்த மாடங்களுடன் மலை மிசை அருவிகள் போல் நுடங்கின என்றும் கூறுகிறார் மாங்குடி மருதனார். 87
உ .மேனிலை மாடத்து மகளிர் முகங்கள்
நிரைநிலை மாடத்து அரமியந் தோறும்
மழைமாய் மதியிற் றோன்றுபு மறைய 88
ஊ. சிறப்பான நால் வேறு தெருக்கள் - தெருச்சுருங்கை
கூலிங் குவித்த கூலி வீதியும் 89
நால்வேறு தெருவினும் காலுற நிற்றர 90
பெருங்கை யானை யின்நிரை பெயரும்
சுருங்கை வீதி மருங்கிற் போகி 91
யானைகள் பல சேர்ந்து போகலாம்படி கீழ் சுருங்கையாக அதனை மேலிட்ட வீதி, சுருங்கை கரந்துறை; ஒழுகுநீர் புகுகையை ஒருத்தரும் அறியாதபடி மறைத்துப் படுத்த வீதி வாய்த்தலை.92