பக்கம்:பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

205


இக்காலத்து இலண்டன், பாரிசு போன்ற பெருநகரங்களில் உள்ள நிலத்தடிச் சாலை (Underground Subway) போன்ற அமைப்பு அன்றைய சிலப்பதிகாரக் காலத்து மதுரையிலேயே இருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

பால்வேறு தெரிந்த நால்வேறு தெருவும்
அந்தியும் சதுக்கமும் ஆவன வீதியும்
மன்றமும் கவலையும் மறுகும் 93

என்னும் சிலப்பதிகார அடிகளிலிருந்து நாற்சந்தியான தெருக்கள் (நால் வேறு தெருக்கள் - நால் வருணத்தார் தெரு என்றும்) முச்சந்தியான தெருக்கள் பலவாய் ஒன்றான முடுக்கு, குறுந்தெரு (சந்து) என இவை மதுரை நகரமைப்பில் இருந்துள்ளன.

சதுக்கம் (Square) முடுக்கு (Ciose) மருகு (Lane) என்று விதம் விதமாக இருந்த தெருக்கள் நகரமைப்பை வளப்படுத்தியுள்ளன. இங்கிலாந்தில் முன்றிலோடு கூடிய வீடுகள் உள்ள வீதியை மன்று (Court) என்றும் மேலே செல்ல முடியாது முடிந்துவிடும் தெருவை முடுக்கு (Close) என்றும், மரங்கள் வளர்ந்த சாலையைச் (Avenue) சாலை என்றும், நடுவே திறந்தவெளி உள்ள இடங்களை (Place), என்றும் தோட்டமுள்ள படப்பை வீட்டை வளமனை (Grove or Bungalow) என்றும் கூறுகிற வழக்கம் நகரமைப்பு (Town Planning) முறையில் உள்ளது. 94

19ஆம் நூற்றாண்டின் இந்த ஐரோப்பிய நகரமைப்பு முறைகள் இரண்டாம் நூற்றாண்டிலேயே மதுரை, போன்ற தமிழக நகரங்களில் இருந்திருப்பது வியந்து பாராட்டுதற்குரியது.

எ. நகரின் பங்கா - இளமரக்கா - உய்யாவனம்

வெப்ப நாட்களிலும், வேனிற் காலத்திலும் குளிர்ந்த சோலைகளிலே குடும்பத்தோடு சென்று இளைப்பாறுதலும், காற்று வாங்குதலும் மதுரை நகரில் வழக்கமா