பக்கம்:பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48

பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்


இடது பக்கத்தில் தொடங்கி வலது பக்கம் நோக்கிச் சென்றால் பெரிதும் நலம் பயக்கும் என்கிறது மனைநூல்.

1. நரி, 2. கிளி, 3. வேங்கைப்புலி, 4. முயல், 5. கோழி, 6. கொக்கு, 7. மயில், 8. ஓந்தி, 9. மான், 10. பசு, 11. மாடு, 12. நாரை, 13. அணில், 14. கழுதை, 15. செம்போத்து 8

தீய நிமித்தங்கள்

1. அழுக்கு ஆடை அணிந்தவன், 2. செம்பட்டை முடியினன், 3. சுருட்டை முடியினன், 4. கால்நொண்டி 5. உடலில் மயில் இல்லாதவன், 6. விரித்த தலையை உடையவன், 7. ஒற்றைக் கண்ணன், 8. கைம்பெண். 9. தடி ஊன்றி வருபவன்

ஆகியோர் எதிரில் வருவது உயிர்க்கு ஏதம் விளைவிக்கும் நிமித்தங்களாகக் கருதப்படுகிறது.9

1. அவிழ்ந்த கூந்தலுடன் வருவோர், 2. மோட்டைத் தலையர், 3. மட்டை என்னும் ஒருவகைப் பாம்பு, 4. துறவி, 5. ஒற்றை அந்தணன், 6. மார்பில்லாத பெண், 7. புதிய சட்டி பானை, 8. மூக்கறையன் 9. எண்ணெய் விற்போன்

ஆகியோர் எதிர்ப்பட்டாலும் தீமையேயாம்.5

எதிர்ப்படும் பொருள்கள் சிலவற்றிற்கும் பின்வரும் விளைவுகள் கூறப்பட்டுள்ளன.

பொருள் பலன்

1. குறைகுடம் - துயரம் உண்டாகும்

2. நெருப்பு - குடும்பம் அழியும்

3. கரி - பிணிகள் உண்டாகும்

4. எலும்பு - கன்று காலிகள் நாசமாகும் .

5. உமி - செல்வம் சீரழியும்

6. விறகு - இகழ்ச்சியும் பழியும் ஏற்படும்