பக்கம்:பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52

பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்


என்னென்ன குறை என்று உய்த்துணர முடியும் என்றும் 20 மனைநூலே கூறிவிடுகிறது.

1. கட்டிய வீட்டின் கிழக்கு மூலையில் சிறுகுழந்தை யின் எலும்பு கிடந்தால் அம்மனையில் கறவையினம் பயன்தராது.

2. தென்கிழக்கு மூலையில் பரி எலும்பு கிடந்தால் பசு கறக்காததோடு அரசினர் சினத்துக்கு ஆளாக நேரிடும்.

3. யானை எலும்பு தென்புறத்திற்கிடந்தால் மனைக் குடையோன் ‘ருணகாரனாக (நோயாளி) இருந்து துயரப்படுவான்.

4. தென்மேற்கு மூலையில் பன்றி எலும்பு இருந்தால் அபமிருத்யு பாவம் (துர்மாணம்) விளையும், 21

5. மேற்குப்புறம் எருதின் எலும்பு கிடந்தால் மனைக் குடையோன் பிறருக்கு ஆருடம், போக்குவரவு பற்றி உரைக்கும் தொழிலில் இருப்பான்.

6. மனையின் எப்பகுதியில் கழுதை எலும்பு இருப்பினும் உரியோன் பொருள் நாசத்தால் வருந்துவான்.

7. ஆட்டு எலும்பு வடக்கே இருந்தால் அண்டை அயலார் விரோதமே நிகழும்.22

8. வடகிழக்கு மூலையில் நாய் எலும்பு இருந்தால் எப்போதும் கலகமே விளையும்.

இக்காரணங்களால் கட்டடம் கட்டத் தொடங்குமுன் - மனையை நன்கு அலசி ஆய்ந்த பின்பே பணி தொடங்க வேண்டும் என்கிறது மனைநூல்.

மண் தேர்வும் பிறவும்

கட்டடம் கட்டுவதற்கு உரிய மனையின் மண்ணைத் தேர்ந்து சோதனை செய்யவும் அதன் முடிவை பொறுத்து