பக்கம்:பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54

பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்


என்று வகைப்படுத்துவர் பொறியியல் நூலார். இதே செயலை மனை நூலாரும் வேறு வகையில் செய்து பார்த் திருக்கின்றனர்.

'திறந்த வெட்டுக் குழிகள்' (Open pits) அகழ்ந்து ஆய்தல் (Probing) என்று இருவகை மண் ஆய்வு கூறப் படுகிறது. மண்ணின் அழுத்தத்தன்மை (Compressibility) யும் காணப்பட வேண்டும். 25

குழி அகழ்ந்து எடுத்தமண்ணை மீண்டும் குழியிலேயே இட்டுப் பார்க்கும் மனைநூல் முறையின்படி இந்த மண் அழுத்தத் தன்மையே பரிசோதிக்கப்பட்டிருக்கிறது என் பதை உணர முடிகிறது. 26

பாட்டியல் நூல்களில் இன்னின்ன வருணத்தார்க்கு இன்னின்ன பாட்டு என்று கூறப்பட்டுள்ளது போல மனை நூலிலும் கூறப்படுகிறது. இன்னின்னவர்க்கு இந்த வகை மனை என வருதலைக் காண்கிறோம்.

(1) அந்தணர்க்கு : வெண்மை வண்ணமும் இனிமைச் சுவையுமுடைய தாமரைப் பூவின் நறுமணம் பொருந்திய மண்ணில் அந்தணர் வீடு கட்டினால் அனைத்து நலனும் எந்நாளும் பெற்று மங்கல நல்வாழ்வு வாழ்வர்.

(2) அரசர்க்கு : செந்நிறமும், துவர்ப்பான சுவையும் குதிரையின் மேனி மணமும் உள்ள நிலத்தில் அரசர் வீடு கட்டினால் துயரமின்றிக் குபேரனை ஒத்த செல்வம் நிலைத்திருக்க வாழ்வர்.

(3) வேளாளர்க்கு : கரிசல் நிற மும் (கருப்பு) கைப்புச்சுவையும், காரச்சுவையும்,தானியங்களின் மணமு முள்ள நிலத்தில் வேளாளர் வீடு கட்டினால் சிறப்புள்ள தாயிருக்கும். 27

(4) வணிகர்க்கு : பசு நிறமும் (பச்சை) புளிப்பு உவர்ப்புச் சுவையும் உள்ள நிலத்தில் வாணிகஞ் செய்வார் கட்டடம் கட்டினால் உயர்வு அடைவர்.