பக்கம்:பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

55


பொதுநிலை

(5) பொதுவில் என்றுமே இடையறாத இனிமையும்,நறுமணமுமுள்ள நிலத்தில் எவ்வினத்தவரும் வீடு கட்ட எந்தக் குறைவும் வராது.

(6) தயிர், நெய், தேன், குருதி, மயிர், மீன், பட்சி ஆகியவற்றின் மணமுள்ள மனையில் கட்டடம் எடுத்தால் எவர்க்கும் ஆகாது. நல்லன எவையும் விளையா.23

உயர்வு தாழ்வு - திசைகள்

மனையின் கிழக்குப் பக்கமும் வடக்குப் பக்கமும் தாழ்வாகவும், மேற்குப்பக்கமும், தெற்குப்பக்கமும் உயர்ந்தும் உள்ள நிலம் கட்டடத்திற்கு என அமைந்தால் பெரிதும் நலம் பயக்கும். 24

(1) தென் சார்பாக வடக்குப் பார்த்த வாயில் அமைகிற மனை மறையோர்க்கு நல்லது.

(2) மேற்குச் சார்பாகக் கிழக்குப் பார்த்த வாயில் அமைகிற மனை அரசர்க்கு நல்லது.

(3) வடக்குச் சார்பாகக் கிழக்குப் பார்த்த வாயில் அமைவது வணிகர்க்கு நல்லது. .

(4) கிழக்குச் சார்பாக மேற்கைப் பார்த்த மனை, அமைவது வேளாளர்க்கு நல்லது.

ஏற்ற இடம் - நிமித்தம் .

மேற்கூறியபடி தேர்ந்தெடுத்த மனையில் கட்டடம் கட்டும் உரிமையாளன் தன்னைவிட மூத்தோர், குருக்கள், இரு முது குரவர், சுற்றத்தாரில் மூத்தவர் ஆகியோர் தன் இடத்திற்கு மேற்கேயும், தெற்கேயும் அமையுமாறு செய்து அவர்கள் வசிப்பிடத்திற்குக் கிழக்கிலும் வடக்கிலும் தன்