பக்கம்:பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

64

பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்


பதினெட்டு அடி செல்வ அழிவு - கையிலிருந்த பொருள் விலகல்-மனையாள் பிணியுறல்
பத்தொன்பது அடி மனைவி சாவு-சண்டை பயம்-புத்திர சோகம் நேரும்.
இருபது அடி புத்திரப் பேறு-வாணிகப் பெருக்கம் செல்வமும் மகிழ்ச்சியும் நிலைத்தல்
இருபத்தோரடி பால் பாக்கியம் பெருகும். துன்பம் அணுகாது.
இருபத்திரண்டு அடி மகிழ்ச்சியான வாழ்க்கை. நன் மக்கட்பேறு-பகைவர் அஞ்சும் நிலை
இருபத்துமூன்றுஅடி ஆயுட் குறைவு-நோய் மிகுதி - சுற்றத்தார் விட்டு விலகுவர்
இருபத்துநான்குஅடி ஆயுட் குறைவு
இருபத்தைந்து அடி மனையாள் இறப்பாள்
இருபத்தாறு அடி இந்திரன் போல் போக வாழ்வு
இருபத்தேழடி உலகு புகழ வாழ்வர்-பட்ட பயிரும்விளையும்
இருபத்தெட்டடி செல்வ மிகுதி - நிறை வாழ்வு, எதிரிகள் அச்சம்
இருபத்தொன்பதடி எல்லா வளமும் பெருகும்
முப்பதடி செல்வப் பெருக்கம். புத்திரப்பேறு
முப்பத்தோரடி இறையருள் உண்டாகும்
முப்பத்திரண்டடி இறையருளால் உலகமே அடிப்படும்