பக்கம்:பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

68

பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்


அங்குலம் பதினெட்டுக் கொண்டது - முக்கால் முழம்


அங்குலம் இருபத்து நான்கு கொண்டது - ஒரு முழம் 53

இவற்றுள் கோயில் மனை அறை, மண்டபம், மாளிகை போன்றவற்றை இருபத்து நாலு விரற்கடை கொண்ட கிடகால் அளப்பது மரபாக இருந்தது. கோபுரம் கூடம் போன்றவற்றை ஆறுவிரல்கடை கொண்ட முழத்தால் அளப்பது வழக்கமாக இருந்து வந்தது.

கட்டடமும் மரவகைகளும்

வீடு கட்டுவதற்குப் பயன்படும் மரங்கள் பற்றியும், எந்தெந்த மரங்களை எங்கெங்கே பயன்படுத்த வேண்டும் என்பது பற்றியும் எவ்வெவற்றிற்கு என்ன விளைவு என்பது பற்றியும் மனை நூல் விவரிக்கிறது. 54

பயன்படுத்த ஏற்ற மரங்களையும் பயன்படுத்தக் கூடாத மரங்களையும் பெயர் சுட்டி இனம் பிரித்துக் கூறவும் செய்கிறது.

(அ) ஆண் மரம் (ஆ) பெண் மரம் (இ) அலி மரம்.

என மரங்களை மூன்று வகையாகப் பிரிக்கிறது மனை நூல். ஒரு கட்டடத்தில் எக்காரணத்தைக் கொண்டு பயன்படுத்தக் கூடாதவை எனப் பின்வரும் மரங்களைத் தவிர்க்கச் சொல்லுகிறது.

கூடாத மரங்கள்

1. அத்தி, 2. ஆல், 3. இச்சி (இறலி மரம்) 4.அரசு, 5. இலவு, 6. புரசு, 7. குச்சம் (குன்றிமணி மரம்),8. இலந்தை, 9.பீலி (பனங்குருத்து) 10. மகிழ், 11. விளா, 12. அகத்தி, 13. எருக்கு 14. நாவல்.