பக்கம்:பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

80

பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்


வடக்குப் பார்த்த - வடமேற்கு மூலை முதல் வட கிழக்கு மூலை வரை
தெற்குப் பார்த்த - தென்கிழக்கு மூலை முதல் தென் மேற்கு மூலை வரை.

இதற்கு நவக்கிரகப் பலன் காண மேற்படி முறையே ஒன்பது பாகம் செய்து பலன் காண வேண்டியிருக்கும்.86

ஏழு சாண் நீளம் மூன்று சாண் அகலம் உள்ள வாசற் காலே உத்தமம். ஒன்பதுசாண் நீளம் ஐந்து சாண் அகலமுள்ள வாசற்காலும் உத்தமம். வாசற்காலில் இருவகை மரம் கலக்கலாகாது.

வாஸ்துபுருஷன் என்றால் நிலக்கடவுள். பூமியின் அதிதேவதை. வீடு கட்டு முன் இக்கடவுளை வணங்கித் தொடங்க வேண்டும். இக்கடவுள் படுத்திருக்கும் நிலைகள், எழும் நிலைகள் பற்றி நூலில் விரிவாகக் கூறப் பட்டுள்ளது. அந்நிலைகளுக்கு ஏற்பக்கட்டடம் கட்டுவோர் இசைந்து செயல்படவேண்டும்.

கருப்புப் பேழை

நண்டு தோண்டிய மண், யானைக்கொம்பால் கீறிய மண், குளத்து மண், எருதுக்கோட்டால் கீறிய மண் ஆகியவற்றைச் சேர்த்து ஐந்து அறை, ஏழறை, ஒன்ப தறை, பதினைந்து அறை ஆகியவற்றுள் ஒரே அளவுடைய ஒரு பெட்டியைச் செய்துகொண்டு அப்பெட்டியின் நடு அறையில் பொன்னும் மணியும் இட்டுத் தானிய வகைகளை நிரப்பி மனையின் நடுப்பகுதியை அறிந்து பதித்துவிடும் வழக்கமும் இருந்துள்ளது. 87

மனையின் அளவு அளந்து ஆதாயம் விரயம் காணும் பழக்கமும் இருந்துள்ளது. நட்சத்திரங்களை வைத்துத் தாராப் பலன் பார்க்கும் பழக்கமும் இருந்துள்ளது.