பக்கம்:பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

90

பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்


இயலில் குறிப்பிடப்பட்ட' மனைநூல்' இலக்கணக் கூறுபாடுகளை' நெடுநல்வாடை’க் காலத்திலும் தமிழர்கள் கடைப்பிடித்திருக்கிறார்கள் என்பதற்கு அகச்சான்று கிடைக்கிறது.

தலைவி தங்கியிருக்கும் இல்லம் உள்ள அரண்மனையை எவ்வாறு தொடங்கிக் கட்டினார்கள் என்றுகூற வந்த நக்கீரர்,


... ... ... ... மாதிரம் விரிகதிர்
 பரப்பிய வியல்வாய் மண்டிலம்
 இருகோற் குறிநிலை வழுக்காது குடக்கேர்பு
 ஒருதிறஞ்சாரா வரைநாள் அமயத்து 3

என்று நாள் செய்து தொடங்கியதைக் கூறுகிறார். மனைநூற் கருத்தும்-நெடுநல்வாடையின் இப்பகுதியும் ஒத்து வருகின்றன. நாள் கோள்களின் நிலை பார்த்து நல்ல வேளையிலே கட்டடம் தொடங்கும் மரபையும் அம்மரபின் பழமையையும் அறிய முடிகிறது. மனைநூலின் நடையும் எழுதப்பட்ட காலமும் பழையதாகத் தோன்றவில்லை. எனினும் மனைநூற் செய்திகள் பழந்தமிழர் வாழ்வில் இருந்தவையே என்பதைத் தெளிய இந்த நெடுநல்வாடைப் பகுதி தகுந்த சான்றாகிறது.

திசைகளிலே விரிந்த கிரணங்களைப் பரப்பின அகன்ற
இடத்தை உடைய ஞாயிறு மேற்றிசைக்கட் சேறற்கெழுந்து
இரண்டிடத்து நாட்டின இரண்டு கோலிடத்துஞ் சாயா
நிழலால் தாரை போக ஓடுகின்ற நிலையைக் குறித்துக்
கொள்ளுந் தன்மை தப்பாதபடி தான் ஒரு பக்கத்தைச்