பக்கம்:பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

91


சாரப் போகாத சித்திரைத் திங்களின் நடுவிற்
பத்தினின்ற யாதோர் நாளிற் பதினைந்தா நாழிகையிலே
அங்குரார்ப்பணம் பண்ணி 4

என இதற்கு நச்சினார்க்கினியர் விளக்கம் எழுதியுள்ளார்.

'சிற்ப நூல்' என்றே உரையில் பெயர் குறிக்கப்படுகிறது. எனவே அக்காலத்திலேயே கட்டடக்கலை ஒரு கலையாக இருந்ததும் அதற்கென்று வரைவிலக்கணநூல் இருந்ததும் பெறப்படுகின்றன. கோலளவு, நூல் பிடித்தல் முதலிய கட்டடக் கலைச் செய்திகளும் பெறப்படுகின்றன. வாஸ்து தேவதை, திசைக் கடவுள்கள் முதலிய செய்திகளும் மனைநூலில் கூறியபடியே வருவதையும் காண்கிறோம்.

இப்போது வழக்கிலுள்ள' மனையடி சாஸ்தி'ரத்தில் கூட மனை கோலுவதற்கு மிகச் சிறந்த மாதமாகச் சித்திரையே கூறப்பட்டுள்ளது. நெடுநல்வாடையும் இதை உறுதி செய்கிறது.

கோயிலை (அரண்மனையை)க் கட்டுவது நல்ல நாளில் தொடங்கப்பட வேண்டுமாதலால் அதற்கு ஏற்பச் சித்திரை மாதத்து இடைப்பத்து நாளில் ஏற்ற தான ஒருநாளில் பகலின் நடுப்போதில் அங்குரார்ப்பணஞ் செய்தனர். பகலின் பதினான்கு நாழிகைக்கு மேற்பட்ட இரண்டு நாழிகை-அபிசித்து முகூர்த்தமென்று கொண்டாடப்படுமாதலாலும் அந்த முகூர்த்தம் எல்லாக் குற்றங்களையும் போக்குமென்பதும் சாதிட நூலார் கொள்கையாதலாலும் அம்முகூர்த்தத்தில் அங்குரார்ப்பணஞ் செய்தனர்.5

என விளக்குவார் வை. மு. கோ. அவர்கள்.