பக்கம்:பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

93


நெடுநல்வாடையே மேலும் கூறுகிறது :

ஒருங்குடன் வளைஇ ஓங்குநிலை வரைப்பின்
பருவிரும்பு பிணித்துச் செலவாக்குரீ இத்
துணைமாண் கதவம் பொருத்தி யினைமாண்டு
நாளொடு பெயரிய கோளமை விழுமரத்துப்
போதவிழ் குவளைப் புதுப்பிடி காலமைத்துத்
தாழொடு குயின்ற போரமை புணர்ப்பிற்
கைவல் கம்மியன் முடுக்கலிற் புரைதீர்ந்து
ஐயவி அப்பிய நெய்யணி நெடுநிலை
வென்றெழு கொடியொடு வேழஞ் சென்றுபுகக்
குன்று குயின்றன்ன வோங்குநிலை வாயில் 10

முற்றம், கூடம், மண்டபம் என்னும் உட்பிரிவுகளை எல்லாம் ஒருசேரக் கவிய வளைத்து உயர்ந்த நிலையையுடைய மதில் என வருகிறது.

கட்டவேண்டிய இடத்தை எல்லாம் முன்னதாக அளந்துகொண்டு இன்ன இன்ன இடத்தின்கண் இன்ன இன்ன கோள்கள் உள்ளன என்பது முதலியவற்றை அறிந்து எந்தெந்தத் திசையில் எந்தெந்தத் தெய்வம் நிற்பதால் நன்மை விளையுமோ அவற்றை அறிந்து நியமித்தபின் தொடங்குக என்றவாறாயிற்று. 11

திசை மரபு

தெற்கு இயமன், வடக்கு குபேரன்,கிழக்கு இந்திரன், மேற்கு வருணன், தென்கிழக்கு அக்கினி, தென்மேற்கு நிருதி, வடமேற்கு வாயு, வடகிழக்கு ஈசானன் என்பது மனைநூல் கூறும் "திசைக்கடவுளர் விளக்கம்" (9 விளக்கப்படம் 1) இத்தெய்வங்கள் நிற்கும் நிலைகளை அறிந்து கட்டடம் அமைப்பது நக்கீரர் காலத்தும் வழக்கமாக இருந்தமை அறியப்படுகிறது. -

‘நூலறி புலவர்' என்ற தொடருக்குச் சிற்ப நூலையறிந்த தச்சர் 12 என நச்சினார்க்கினியர் கூறும் விளக்கம்