பக்கம்:பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

95


என்பதையும் கதவுகள் ஒன்றினுள் ஒன்றாக இரண்டாய் அமையும் எனவும் இதிலிருந்து அறிய முடிகிறது.

பழந்தமிழர் கட்டடக்கலை மரபான வாயிற்படியில் யானைகளிடையே திருமகள் சிலை அமைத்தல் (கஜ லட்சுமி) இன்றும் நடைமுறையில் இருப்பதைக் காண்கிறோம்.

கலித்தொகை, சீவகசிந்தாமணி முதலிய பிற நூல்களிலும் இக்கருத்துக் கூறப்பட்டுள்ளது.

- வருநுதல் எழில்வேழம் பூநீர்மேற் சொரிதரப்புரி நெகிழ் தாமரை மலரங்கண் வீறெய்தித் திருநயந் திருந்தன்ன ‘ நான் மருப்பின் மதயானை நாறிய -

பைந்தாமரை மடந்தையைத் தேன் மதர்ப்பத் திளைத்தாங்கவன் திருவின்

சாயனலங் கவர்ந்தபின் ஊன் மதார்த்த வொளி வேற்கண்ணார்

பரவவிவ் வாறொழுகு மன்றே வானகத்து நிலத்து மில்லாவண்ணம் . . - மிக்கமணிப் பூணினான்

‘ மேற்படி சிந்தாமணிச் செய்யுள் உரையில் நச்சினார்க் கினியர், “இரண்டானை பக்கத்தே நின்று நீரைச்சொரிய நடுவே தாமரைப் பூவிலேயிருந்த திருமகளைத் திளைத் தாற்போல” என்று விளக்கியுள்ளார். - -

வாயில் நெடுநிலையில் தெய்வம் உறையும் என்ற நம்பிக்கையில் அதற்கு ஐயவி அப்பி நெய்யணியும் மரபை, நற்றினையும் “ கூறும். மதுரைக் காஞ்சியிலும் இந்த ஐயவி அப்புதல் பற்றிக் குறிப்புள்ளது.

தொல்வலி நிலைஇய அணங்குடை நெடுநிலை நெய்படக் கரிந்த தண்போர்க் கதவின்” குறுங்கதிர்த் தோரை நெடுங்கால் ஐயவி *