பக்கம்:பழமொழி நானூறு-மூலமும் உரையும்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

9



சிறிய பொருள் கொடுததுச் செய்த வினையால், பெரிய பொருள்கருது வாரே.--விரிபூ

விராஅம் புனலூர வேண்டு, அயிரை விட்டு

வராஅல் வாங்கு பவர்.

‘வறியார்க்கு ஒன்று ஈவதே ஈகை, பிறவெல்லாம் குறியெ திர்ப்பை நீரது உடைத்து' என்ற குறளின் கருத்தினைக் கொண் டது.இச்செய்யுள்.ஈகையால் இம்மையிற் கைம்மாறையோ, மறு மையில் இன்பத்தையோ பெறலாம் எனக் கருதாது, அதனைக் கடமையாகக் கருதிச் செய்க என்பது கருத்து. அயிரை விட்டு வராஅல் வாங்குபவர்’ என்பது பழமொழி. 15 16. நல்லதை உணரத் தீயவரால் முடியாது

காட்சிக்கு இனியதாகத் தோன்றுகின்ற மயில்கள் ஆடிக் கொண்டிருக்கின்ற, பெரிய மலைகளையுடைய வெற்பனே! எஃகினை எப்பொழுதுமே எஃகினைக் கொண்டேதான் பிளக் கலாம். அதைப்போலவே, நல்லவர்களின் நல்ல தன்மை யை உணரவேண்டுமானால் அவர்களைவிடநல்லவர்களே அதனை முறையாக உணரக்கூடியவர்கள். தீயவர்கள் ஒரு போதும் அதனை உணரவே மாட்டார்கள்.

நல்லார் நலத்தை உணரின், அவரினும் நல்லார் உண்ர்ப; பிறர்உணரார்;--நல்ல மயிலாடு மாமலை வெற்ப! மற்று என்றும், . அயிலாலே போழ்ப அயில்.

'வயிரத்தைக் கொண்டு தான் வயிரத்தை அறுக்க வேண்டும’ என்று வழங்கும் பழமொழியையும் நினைக்கநல்ல தன்மை இல்லாதவர் கண்ணுக்கு நல்லவரும் தீயவராகவே தோன்றுவர் என்பது கூறி, நல்ல தன்மை உடையவராவதன் சிறப்பு வற்புறுத்தப்பட்டது. அயிலாலே போழ்ப அயில்’ என்பது பழமொழி. . - 16 17. செய்பவனுக்குத்தான் வருத்தம் தெரியும்!

மக்கள் வரிசையாக இருந்து, அதனால் மாட்சிமைப்பட்டு விளங்கும் ஒரு வட்டாடும் அரங்கம், அந்த அரங்கினுள்ளே,தாம் வட்டாடாமல் ஒதுங்கிப் பக்கத்திலே இருந்து பார்த்துக் கொண்டிருப்பவர் சிலர் அவர்களுக்குவட்டாடும்போர்மிகவும் எளிதாகவே தோன்றும். அதன் நுட்பத்தினை அறிந்தவர்க்கே, அதன் உண்மையான நிலைமைகள் தோன்றும்.அதுபோலவே, அருகே இருந்து நுண்மையான கருத்துக்களைச் சொன்னாலும்