பக்கம்:பழமொழி நானூறு-மூலமும் உரையும்.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திரட்டிலே கண்ட சில மிகைப் பாடல்கள்

அருளுடைமை, கொல்லாமை, ஐந்தடக்கல், வாய்மை, இருளடையாக் கல்வியொடு, ஈகை, புரை இல்லா

உள்ளத்தில் தீர்த்தம் இவைஉளவா கப்பெற்றால், - வெள்ளத்தில் தீர்த்தம் மிகை. (146)

‘அமையப் பொருள் இல்லார் என்பது இமையத்து அணையார்மண் இல்லை; சிமைய நகையேர் இலங்கருவி நல்வரை நாட! நகையேதான் ஆற்றி விடும். (1107)

அறியாமையோடு இளமை ஆவதாம்; ஆங்கே செறியப் பெறுவதாம் செல்வம், சிறிய பிறைபெற்ற வாணுதலாய்! தானேயா டும்பேய் பறைபெற்றால் ஆடதோ பாய்ந்து? (1139)