பக்கம்:பழமொழி நானூறு-மூலமும் உரையும்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16

பழமொழி நானூறு மூலமும் உரையும்



பல்லாண்டும் ஈண்டிப் பழுதாய்க் கிடந்தது வல்லான் தெரிந்து வழங்குங்கால்,--வல்லே வலிநெடிது கொண்டதறாஅது அறுமோ குளநெடிது கொண்டது நீர்? 'செல்வத்தின் பயனே தக்கவர்க்கு ஈதல்'. அதனால், அவர் செல்வமும் குறையாது அறுமோ குளநெடிது கொண்டது நீர் என்பது பழமொழி. - - 29 30. வருவாய் உடைய செல்வம்

விளைந்த நெற்பயிரை அறுக்கும் பொருட்டாக, வயல்களில் தேங்கி நிற்கும் நீர் வடியுமாறு, உழவர்கள் அணைகளைத் திறந்து விடும் நீர் வளமுடைய ஊரனே! நரி நக்கிவிட்டது என்பதனால் கடல்நீர் முழுவதும் வற்றிவிடுமோ? வற்றாதே! அது போலவே, தமக்கு ஏவல் செய்பவர் பலராலும் களவு செய்யப்பட்டாலும் வருவாய் மிகுந்தவர்களுடைய பெருஞ்செல்வமும் குறைந்துபோவதில்லை.

களமர் பலரானும் கள்ளம் படினும், வளமிக்கார் செல்வம் வருந்தா;--விளைநெல் அரிநீர் அணைதிறக்கும் ஊர! அறுமோ, நரிநக்கிற் றென்று கடல். - ஏவலர் சிறு களவுகள் செய்தனர் என்றாலும், அதனைப் பெரிதாகப் பொருட்படுத்தாதிருக்க வேண்டும்; அதனால் செல்வம் குறைந்து விடாது என்பது கருத்து. அறுமோ, நரி நக்கிற்று என்று கடல்’ என்பது பழமொழி. 30 31. ஊழ்வினைதான் காரணம் -

ஓங்கி உயர்ந்த மலைமுடிகளையுடைய மலைநாடனே! செல்வம் வந்து ஆகிவருகின்ற நல்லூழ் உள்ளவர்க்குச் செய்வ தொரு முயற்சியுங்கூட வேண்டியதில்லை. செல்வம் போகின்ற போகூழ் வந்தவர்க்கு,அதனைப்போகாமல்நிலைநிறுத்தச்செய் யும் முயற்சிகளாலும் பயனில்லை. எத்தகைய முயற்சிகளைச் செய்து எத்தகைய செல்வத்தைப் பெற்றாலும், ஆகாத தலை யெழுத்து உள்ளவர்களுக்கு ஆகிவருவதும் ஒன்றும் இல்லை. என்பதை அறிவாயாக. " . -

ஆகும் சமயத்தார்க்கு ஆள்வினையும் வேண்டாவாம் போகும் பொறியார் புரிவும் பயனின்றே; ஏகல் மலைநாட! என்செய்தாங்கு என்பெறினும் ஆகாதார்க்கு ஆகுவது இல்.