இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
103
“பணமா? அது எங்கே இருக்கிறது?” என்று கேட்டேன். சிரித்து விட்டு, சரி, நீர் வாங்கி வைத்துள்ள நிலத்தின் மதிப்பையே கட்ட வேண்டிய முன் பணத்துக்கு ஈடாக வைத்துக் கொண்டு வீட்டை முடித்துத் தர ஏற்பாடு செய்கிறேன்” என்று சொல்லி விட்டுப் போனார். அப்புறம் சில மாதங்களுக்குள்ளாவே வீட்டையும் கட்டிக் கொடுத்து விட்டார்.
பின்னர் மாதா மாதம் என் தவணைத் தொகையைத் தவறாமல் கட்டி வந்தேன். சில மாதங்களுக்கு முன்புதான் சீட்டுக் கம்பெனி, ஒன்றில் கடன் வாங்கிப் பாக்கித் தொகை முழுவதையும் கட்டித் தீர்த்தேன்.
என் வீட்டைப் பொறுத்தவரை காமராஜர், ஆர். வெங்கட்ராமன், ராசாராம் இம்மூவருக்கு நான் என்றும் கடமைப்பட்டிருக்கிறேன். பாக்கியைக் கட்டி முடிக்க எனக்குப் பண உதவி செய்த அந்த வங்கிக்குக் கடன்பட்டிருக்கிறேன்.