பக்கம்:பழைய கணக்கு.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

38

கொடுத்தனுப்பிய பாங்கு என்னை நெகிழ வைத்து விட்டது. அப்புறமும் நான் தயங்கித் தயங்கி நின்று கொண்டிருந்ததைக் கண்ட அவர், “அவ்வளவுதானே, அப்புறம் என்ன?” என்பதைப் போல் பார்த்தார்.

“நான் இந்தப் பதினொரு மாதங்களில் எழுநூறு ரூபாய் போல் இந்த ஆபீஸில் கடன் வாங்கியிருக்கிறேன்” என்று இழுத்தேன்.

“சிவ சிவா! அதை நீங்கள் திருப்பித் தர வேண்டாம். அப்படியே மறந்துவிடலாம். நான் எப்போதோ மறந்தாச்சு. அப்பவே ‘ரைட் ஆஃப்’ பண்ணியாச்சு” என்றார்.

என் உள்ளத்தில் ஏற்கனவே உயர்ந்திருந்த திரு சதாசிவம் அவர்கள் அந்தக் கணத்தில் ஓங்கி உயர்ந்து விசுவரூபமாய்க் காட்சி அளித்தார். சில நேரங்களில்தான் சில மனிதர்களை அறிய முடிகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பழைய_கணக்கு.pdf/39&oldid=1145713" இலிருந்து மீள்விக்கப்பட்டது