இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
65
எழுந்தவுடன் ஒரு பயங்கரச் செய்தியை டெலிபோன் அறிவித்தது.
“பம்பாயிலிருந்து சென்னை புறப்பட்ட விமானம் பயங்கர விபத்துக்குள்ளாகி அந்த விபத்தில் நூறு பேருக்கு மேல் இறந்து விட்டார்கள். அவர்களில் உங்கள் மாப்பிள்ளையும் ஒருவர்” என்பதே அந்தச் செய்தி.
நான் மூட நம்பிக்கைகளை வெறுப்பவன்தான். ஆனாலும் சகுனத்தில் எனக்குள்ள நம்பிக்கையை இனி யாராலும் அசைக்க முடியாது.