பக்கம்:பழைய கணக்கு.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
காந்தி தரிசனம்

ஆதித்தனார் ‘தமிழன்’ என்ற பெயரில் வாரப் பத்திரிகை ஒன்று நடத்தி வந்தார். அதில் எனக்கு உதவி ஆசிரியர் வேலை தந்தார். வருடம் 1943. சம்பளம் ஐம்பது ரூபாய்.

அப்போது கல்கி அவர்கள் விகடனில் இருந்து விலகி திரு சதாசிவத்துடன் சேர்ந்து பத்திரிகை நடத்திக் கொண்டிருந்த நேரம். அதில் அப்போதைய சினிமாக்களின் அதிகமான நீளத்தை (17,000 அடி) விமரிசித்து “எத்தனை அடி வேண்டும்?” என்று நகைச்சுவைக் கட்டுரை ஒன்று எழுதியிருந்தார் கல்கி. நானும் அதிக நீளத்தைக் கேலி செய்து தமிழன் பத்திரிகையில் ஒரு கட்டுரை எழுதினேன். என்னுடைய அந்தக் கட்டுரையை மிகவும் ரசித்ததாக கல்கி என்ன நேரில் பார்த்த போது சொன்னர். அத்துடன் ‘கல்கியில் சேருகிறாயா?’ என்றும் கேட்டார். நான் சேர்ந்து விட்டேன். சம்பளம் எழுபத்தைந்து ரூபாய்.

முதலில் ஒரு சிறுகதை எழுதினேன். அதைப் படித்துவிட்டு, “இப்பொழுதெல்லாம் வீட்டுக்கு ஒரு பெண் கதை எழுதுகிறாள். நீயும் அதையே செய்யாதே. கதை எழுதுவதை நிறுத்திவிட்டு அரசியல் கட்டுரை, சினிமா விமரிசனம், பயணக்கட்டுரை, ஆகாச வெடி போலப் பத்திரிகைக்குத் தேவையான விஷயங்களை எழுது” என்றார், எழுத ஆரம்பித்தேன். இவை தவிர அன்றாட வாழ்க்கையில் நாம் காணும் சின்னச் சின்ன அனுபவங்களை ஒரு பொது நோக்கோடு நகைச்சுவை கலந்து எழுதினேன். கல்கியும் சதாசிவமும் அவற்றை மிகவும் ரசித்து ஓர் ஆரம்ப எழுத்தாளனுக்குக் கை கொடுக்கக் கூடிய உற்சாகமான வரவேற்பை அளித்தார்கள். நான் ஒரு பத்திரிகையாளனாக ஆகிக் கொண்டிருக்கிறேன் என்கிற கர்வம் எனக்குள் லேசாக வேர் விட ஆரம்பித்தது.

அது நாடு சுதந்திரம் பெற்று, தேசத் தலைவர்கள் ஆட்சிப் பொறுப்பை ஏற்றிருந்த ஓர் இறுக்கமான கட்டம். இந்து, முஸ்லிம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பழைய_கணக்கு.pdf/7&oldid=1145641" இலிருந்து மீள்விக்கப்பட்டது