இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
82
விழித்துவிட்டுச் செருப்பு இல்லாமலே வெறுங்காலுடன் வெளியே நடந்து போனார்.
அதைக் கவனித்துக் கொண்டிருந்த கிங்காங் தமது கர்ஜனைக் குரலில் அவரை அருகில் அழைத்தார். கிங்காங்கின் அதிகாரக் குரல் கேட்டதும் ராமசாமிக்கு சப்தநாடியும் அடங்கிப் போய் விட்டது. “நியூஸ் எடுக்க வந்த இடத்தில் நாமே நியூஸாகப் போகிறோம்” என்று நடுங்கியபடியே கிங்காங் அருகே சென்றார்.
“ஒரு செருப்பை என் மீது வீசி விட்டு இன்னொரு செருப்பை உபயோகிக்க முடியாமல் இங்கேயே விட்டுச் செல்கிறாயே, ஏன்? பயமா? இந்தா, உன்னுடைய செருப்பு. போட்டுக் கொண்டு போ...இது ஒரு விளையாட்டுதான். ஸ்போர்ட்ஸ்! இதிலெல்லாம் உணர்ச்சி வசப்படக் கூடாது” என்று சொல்லிச் செருப்பை அவரிடம் கொடுத்து அனுப்பினார் கிங்காங்.