உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பவள மல்லிகை.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 பவள. மல்லிகை

முகத்தோடு இருந்தாள். அதைப் பார்த்து அரசன் வியப் புற்ருன். 'உன் மகள் காணுமற் போனதற்காக நீ கவலைப் படுவதாகத் தெரியவில்லையே t' என்று கேட்டான். ' என் மகளா? ரகசியத்தைச் சொல்கிறேன். அவள் என் மகள் அல்ல. எனக்குப் பெண் குழந்தை பிறந்தவுடன் இறந்துபோய்விட்டது. மருத்துவம் செய்ய வந்தவள் வேறு குழந்தையை வைத்துவிட்டுச் சென்ருள். எப்படி யாவது ஒரு குழந்தையை வளர்க்கவேண்டுமென்ற ஆசை யால் நான் ஏற்றுக்கொண்டேன். குழந்தை நம்முடைய குலத்தில் பிறந்திருந்தால் ஒழுங்காக இருந்திருக்கும்' என்று அதிசயமான செய்தி ஒன்றை வெளியிட்டாள்.

அரசன் ஸ்தம்பித்துச் சிறிது கோம் யோசனையில் ஆழ்ந்திருந்தான். பிறகு, "அவளுக்காக இல்லாவிட்டாலும் நம்முடைய கெளரவத்தைக் காப்பாற்றிக் கொள்ளவாவது திருடனைக் கண்டு பிடிக்கவேண்டும். நம்முடைய நகரத் தில் நம் பாதுகாப்பில் உள்ள பொருளை வேருெருவன் கொண்டுபோக, நாம் பேசாமல் இருந்தோம் என்ருல், உலகம் நம்மைப் பழிக்கும்' என்ருன். - சில மாதங்கள் தேடிய பிறகு தன் மகள் துரகபுரியில் இருப்பது தெரிந்தது. உடனே அதன்மேல் படை எடுக்க எற்பாடு செய்தான் அரசன். இதற்குள் துர கபுரி அரச கிைய துரங்கப்பிரியன் காலமாகவே, அசுவபதியே அரச ைைன். குதிரையின்மேல் தகாதவர்களே எற்றிய பாவமும் அதைத் தேரில் கட்டிய பாவமும் சேர்ந்துகொண்டு அவ லுக்குப் பல துன்பங்களை உண்டாக்கின. தன் தந்தையை இழந்து ராஜ்யபாரத்தைக் கைக்கொண்டவுடனே, அங்கிய நாட்டுப் படைகள் வந்து நகரத்தை முற்றுகையிட்டன.

போர் மூண்டது. அசுவபதியினல் பிற நாட்டுப் படைக்கு முன்னே கிற்க முடியவில்லை. கடைசியில் பகை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பவள_மல்லிகை.pdf/104&oldid=592194" இலிருந்து மீள்விக்கப்பட்டது