பக்கம்:பாசமுள்ள நாய்க்குட்டி.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

17

 வைத்துக் கொண்டு நான்கை விற்றுவிட இருப்பதாகக் கூறினான். நான் ஒன்றை விலைக்கு வாங்கிக்கொள்வதாகக் கூறினேன். அவன் விலை வாங்காமலே எனக்குத் தந்து விட்டான். அதை வளர்க்கும் முறைகளை விளக்கிச் சொன்னான்.

அந்த நாயையும் அன்பாக வளர்த்தேன். அது கண்ணனைப் போல் சாதுவல்ல. வேண்டாத ஆட்களைக் கண்டால் உறுமும், உறுமுவதைக் கண்டு அவர்கள் ஓடிப் போக வேண்டும். ஒடா விட்டால், இது பாய்ந்து கடித்துக் குதறி விடும். வீர முள்ள நாய். எனவே இதற்கு, நான் மிக மிக மதித்திருந்த வரலாற்று நாயகராகிய சிவாஜி மன்னரின் பெயரை வைத்தேன். சிவாஜி என்று கூப்பிட்ட வுடன் அது பாய்ந்தோடிவரும் அப்போது அந்த மாவீரரைப் போலவே காட்சிதரும்.

சிவாஜி வந்த பிறகு நான் பழைய கண்ணனை மறந்துவிட்டேன் என்றே சொல்லலாம். அது எனக்கு மிக நெருங்கிய தோழனாகி விட்டது.