பக்கம்:பாசமுள்ள நாய்க்குட்டி.pdf/36

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கோலபுரி ஊர்வலம்



கோலபுரி என்ற ஊரிலே வண்ணங்கி என்ற ஒரு மன்னன் இருந்தான்.

மன்னன் வண்ணங்கி எப்போதும் இன்பமாகவேயிருந்தான். அவனுக்குப் புதுப் புது ஆடைவகைகளையணிவதில் விருப்பம் மிகுதி. காலையில் எழுந்தவுடன் ஓர் ஆடையணிவான்; குளித்தவுடன் மற்றோர் ஆடையணிவான்; அரசவைக்கு வரும்போது வேறோர் ஆடை அணிவான்; பகல் உணவுக்கு ஒர் ஆடையணிவான்; பிற்பகலில் இன்னுமோர் ஆடையணிவான்; நகர்வலம் வரும்போது ஒவ்வொரு வீதி கடந்ததும் ஓர் ஆடை மாற்றுவான். வேட்டைக்குச் சென்றால் அதற்கென்று ஓர் ஆடை, நீதிவிசாரணையின் போது மற்றோர் ஆடை. இப்படி அவன் ஒரு நாளைக்கு இருபது ஆடை மாற்றுவான்.