பக்கம்:பாசமுள்ள நாய்க்குட்டி.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

42


தங்கள் சூழ்ச்சியில் அமைச்சர் சரியாக ஏமாந்து விட்டார் என்று எத்தர்கள் தெரிந்து கொண்டார்கள்.

“பெருமானே உடையின் சிறப்பைப் பற்றி அரசரிடம் எடுத்துக் சொல்லுங்கள். முதலில் இந்த உடையை நாங்களே எடுத்து வந்து அரசருக்கு எங்கள் கைகளாலேயே அணிந்து விட விரும்புகிறோம்” என்றார்கள்.

“அப்படியே செய்யலாம்!” என்று கூறி அமைச்சர் அரசவை மண்டபத்திற்கு வந்தார்.

அங்கே அரசர் ஆவலோடு காத்திருந்தார்.

அமைச்சரைக் கண்டவுடனே, “எப்படியிருக்கிறது” என்று கேட்டார்.

அமைச்சர் அந்த உடையைப் பற்றிப் பெரிதாகப் புகழ்ந்து பேசத் தொடங்கினார்.

“பட்டினும் சிறந்த பளபளப்பு! பொன்னினும் சிறந்த வண்ணம்! இதுபோன்ற எடுப்பான உடையை நான் இதுவரை பார்த்ததேயில்லை என்று அமைச்சர் அளந்து கொட்டினார். இதைக் கேட்ட அரசன் மற்றும்