பக்கம்:பாசமுள்ள நாய்க்குட்டி.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



56


நாட்டு மாளிகை ஏற்றதாய் இருக்கும். இயற்கையாக உள்ள இந்த வசதிதவிர எந்தக் காலத்திலும் செயற்கையாக, இந்த வசதிகளைத் தரக்கூடிய அமைப்புள்ள மாளிகைகளையும் கட்டியிருக்கிறேன். பருவத்துன்பங்களைப் பற்றியே கவலைப்படத் தேவையில்லை” என்றான் அந்த அன்பு மகன்.

பருவங்களைப் பற்றி மகன் பேசப் பேச அப்பா புருவங்களை உயர்த்தி வியப்புடன் மகனைப் பார்த்தார்.

“அன்பு மகனே, நீ இன்னும் என் மனக் கருத்தைப் புரிந்து கொள்ள வில்லை. நீ கட்டியுள்ள மாளிகைகள் பருவகாலத் துன்பங்களுக்கு வேண்டுமானால் ஈடு கொடுக்கலாம். ஆனால், மனிதனுக்கு ஏற்படக் கூடிய மனக் கவலைகளுக்கு மருந்தாக மாட்டா.

“எந்த நாட்டுக்குச் சென்றாலும் அங்குள்ள நல்லறிஞர்களோடு நட்புக் கொள்ள வேண்டும். அப்படி ஏற்படுகின்ற நண்பர்கள் தான் மனக்கவலை ஏற்பட்ட காலத்தில் ஆறுதல் அளிக்கக்கூடிய ஆற்றல் உள்ளவர்கள்.