இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
பொன்வண்டு வறுவல்
ஒரு பொன் வண்டு, காட்டுப் பாதையில் மகிழ்ச்சியாகப் பாடிக் கொண்டு இருந்தது. அதன் இசை இளங்காற்றில் கலந்து எங்கும் இன்ப ஒலியைப் பரப்பிக் கொண்டிருந்தது.
அவ்வழியாக ஒரு முள்ளம்பன்றி வந்தது. அது நீண்ட நேரமாகப் பட்டினி.
நெடு நேரமாகத் தேடியும் அதற்கு உணவு கிடைக்கவில்லை. பூச்சிகள், வண்டுகள் தாம் அதற்கு உணவு. பொன் வண்டின் இனிய இசையைக் கேட்ட முள்ளம் பன்றி, பாட்டு வந்த திசையை நோக்கி நடந்தது.
முள்ளம் பன்றி வருவதைப் பாராமல் பொன்வண்டு உச்சமான குரலில் பாடிக் கொண்டிருந்தது. அருகில் வந்த முள்ளம் பன்றி சடக்கென்று பொன் வண்டைப் பிடித்துக் கொண்டது.