இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
68
“ஒரு நொடி பிந்தி விட்டான். அவ்வளவு தான்” என்றார் அப்பா.
தான் முதல் பரிசு பெறாதது அப்பாவிற்கு எவ்வளவு வருத்தத்தை உண்டாக்கியுள்ளது என்பதை அந்தப் பதிலில் இருந்து தெரிந்து கொண்டான் அண்ணாமலை.
அன்று முதல் எந்த வேலையையும் உடனுக்குடனே செய்யும் வழக்கத்தை மேற்கொண்டான். சிறிது நேரங்கூட வீணாக்காமல் ஒவ்வொரு செயலையும் செய்தான்.
அடுத்த ஆண்டு அவன் தான் முதல் பரிசு வாங்குவான் என்று இப்பொழுதே உறுதியாகச் சொல்லலாம்.