இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
75
விட்டாய்! இனி நான் மன நிறைவோடு சாவேன்” என்றார்.
ஆனால் உண்மையில் அவர் அப்போது சாகவில்லை. சில நாட்களில் அவர் குணம் அடைந்து விட்டார். நீண்ட நாட்கள் உயிரோடு இருந்தார். மகன் பொறுப்புடன் உழைத்து மேலும் தன் செல்வத்தைப் பெருக்கியதைக் கண்டு மனநிறைவுடன் வாழ்ந்தார்.
கணபதியும் பெரிய மனிதர்கள் பாராட்டும் சிறந்த பிள்ளையாக வளர்ந்து, பெருமையும் செல்வாக்கும் பெற்று விளங்கினான்.