பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 ஜாக்சன் சந்திப்பு 103

அகழ்ந்தெடுப்போம்; அல்லாதவரை ஆகரித்து வருவோம்; இல் லாக பழிகளை யெல்லாம் எம்மேல் வினே சுமத்தி விருதாவாகக் சொல்லாதன வெல்லாம் நீரே சொல்லல் இங்கே நல்லதல்ல.

ஜாக்சன்:- நல்லது. எங்களுக்குச் செல்லவேண்டிய கிஸ்தியை நீர் இதுவரையும்யாதும்செலுத்தவில்லை; நாளைக்கடத்தி வருகின்றீர்; பாக்கியைக் கேட்க வந்தவரிடம் போக்குரைகள் ஆடிப் பொல்லாங்கு செய்கின்றீர்; அவ் அல்லல்கள் எல்லாவற் மையும் அறவே ஒழித்து இனிமேல் நல்லவராய் நின்று வரிகளை ஒல்லையில் செலுத்திவர வேண்டும்; இல்லையேல் உமக்குத் தொல் லைகள் பல தொடரும்; உள்ளதை யுணர்ந்தொழுகாவிடின் உமது பாளையம் ஒழிந்து போக நேரும்; விரைந்து தெளிந்து எங்கள் திறையைக் கொடுத்து விடும்; உம் கருத்து என்ன? உறுதி யாகச் சொல்லும்.

மன்னன்,-உறுதியை இறுதியாக அறுதியிட்டுச் சொல்லு கின்றேன்; வரி செலுத்தும் வழக்கம் எமக்கு என்றும் இல்லை.

ஜாக்சன்:- நீர் மனத்திமிரோடு மதத்துப் பேசுகின்றீர்! மேலிருந்து உக்கரவு வரும்வரையும் நீர் இங்கேயே தங்கியிருக்க வேண்டும்; சங்க ஆணையால் உம்மை நான் கடை செய்திருக்கி

றேன்; இடைபிரிந்து எங்கும் நீர் வெளியே போகக் கூடாது.

போர் மூண்டது.

இங்கனம் சொல்லி முடியவே முன்னரே மறைவாகச் சூழ்ந்து வைத்திருக்க மல்லர் சிலர் இம்மன்னன் மேல் மண்டிப் பாய்க்கார்; பாயவே இவர் உள்ளங்கொதித்து ஒள்ளெரி யென் னத் துள்ளி யெழுந்து உடைவாள் உருவி உருத்து வீசினர். கலை கள் சில உருண்டு கரையில் வீழ்ந்தன; கொலைகள் விழவே அவன் குலே நடுங்கி அயலே நிலைகலங்கி ஒடிஞன். அவனது நிலையை அறிந்து நேரே இகழ்ந்து விடுத்துத் காழிட்டிருந்த கதவு களையெல்லாம் காளால் உதைத்துக் ககர்த்தெறிந்து இவ்வாள் விரர் கீழிறங்கி வெளியே வந்தார்; வரவே உள்ளே நிகழ்ந்த கலகக் கூக்குரலையறிந்து பட்டாளங்கள் வெடிகளோடு கடுத் கடர்ந்தன. அடுதிறலோடு சுடுமுறையில் ஆர்த்து மூண்டன.