பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. மந்திராலோசனை 81

நாம் உறவுகொண்டாடலாம்; இன்றேல் நம் உயர்திறல் காட்டி உறுதியை நாட்டவேண்டும்; எங்கும் பொறுதி கூடாது' என இங்ங்னம் அச் சிங்கன் நன்கு மொழிந்தான். அவன் பேசி முடிந்தபின் அருகே யிருந்த துரைச்சிங்கம் எழுந்தான்.

துரைச்சிங்கம் உரைத்தது. இவன் சிறந்த மதிமான். பலகலைப் பயிற்சியும் உலகிய லறிவும் ஒருங்கே அமைந்தவன். தலைவனை நோக்கி நலமுற கவின்ருன். அருந்திறல் அண்ணலே முன்னுற மொழிக்க மூவருள்ளும் இடை மொழிக்க எக்கல் மொழியையே என் உளம் ஏந்தியுள்ளது. எளியர், வலியர், அயலினர், உறவினர் என எவரையும் வாரம்பற்றி ஒரம்பேச லாகாது. அங்கிய நாட்டி னின்று இங்குப் பிழைக்க வந்தவர் தழைத்து கின்று தரணியாள வங்கா ரே என்று முரனுடன் அவரை முகங்கெரி யாமல் இகழ்ந்து பேசுதல் முறைமை அன்று. எவரிடமும் உள்ளுறு ககுதியை ஊன்றி யறிந்து நல்லதாயின் உவகை கொள்ள வேண்டும். வெள்ளைக்காரர் மிகவும் கல்லவர். உழைப் பில் வல்லவர். காலம் கருதிக் கருமமே கண்ணுப் உறுதியுடன் நின்று ஊக்கி முயலும் ஒண்மையாளர். புதிது புதிதான அதிசயப் பொருள்களை மதிவலியுடன் ஆராய்ந்து நாளும் நாளும் உழைத்து விளைத்து நீளவும் தழைத்து வருகின்ருர். ஒருங்கு நெருங்கிய அவரது உழைப்பின் வரவு உலக மக்க ளுக்குப் பெருங்கிளர்ச்சியை வளர்த்து வருகின்றது. பொறி நுகர்ச்சிகளுக்கு உரிய அரிய பெரிய இனிய பொருள்களைச் செய்வதில் கம் அறிவைப் பயன்படுத்தி அற்புதங்கள் பல ஆற்றி வருதலர்ல் விற்பனர்களாய் அவர் விளங்கி நிற்கின்ருர். ஆன்ம நிலையில் அயலகன்று இருப்பினும், உலக நிலையில் அவர் மிக வுயர்ந்துள்ளனர். அயர்ச்சி யில்லாக முயற்சியால் அவர் உயர்ச்சி யுற்றனர். அரும்பாடு பட்டுக் கருங்கடல் கடந்து, இக்காட்டை யடைந்து, ஒருங்குகூடி ஊக்கி முயன்ருர்; பெரும் பொருள் திரண்டது. மரம் செடி கொடிகள் போல் கின்ற இடத்திலேயே கின்று, ஒ ன் று ம் செய்யாமல் முன்னேர் படைத்து வைத்தகை அழித்துக் கிடைக்கதை யுண்டு, மடக்கை

ll