பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மு. க வு ைர்.

இல்லை; பொல்லாத புலேகளேயே எல்லாரும் புகழ்ந்து போற்று கின்ருர் தகுதி கண்டு மதியாதார் தகாதவராய் ஒழிகின்ருர்,

பாஞ்சாலங்குறிச்சி வீரரை வெள்ளைக்காரர் மதித்து உள்ளம் வியந்துள்ளது போல் இக் காட்டவர் உணர்ந்து கொள்ளவில்லை. ஊமைத்துரையைக் குறித்து சீமைத்துரைகள் கூறியிருப்பன சீர்மை நிறைந்துள்ளன; அவற்றுள் ஒன்று அயலே வருகிறது. “One of the most extraordinary mortals 1 ever knew” "கான் அறிந்த எவரினும் இவர் மிகவும் அதிசயமான ஓர் அம்புத மனிதர்" எனக் கும்பினியின் தளபதியாய் வந்தவர் இந்த நம்பியை வியந்து இவ்வாறு குறித்திருக்கிரு.ர்.

துரைச்சிங்கம் இறந்து பட நேர்ந்தபோது ஜெனரல் வெல்ஷ்துரை பெரிதும் மறுகி எழுதியுள்ளார்; அந்தச் சேனைத் தலைவன் உருகி வரைந்துள்ளது கருதி யுணரவுரியது.

“He was at last doomed to grace a gallows, in reward

for the most disinterested and purest patriotism *

(General Welsh)

“சிறிதும் தன்னலம் கருதாத பரிசுத்தமான தேசாபிமானத்தின் பெரிய வெகுமதியான அரிய மகிமையோடு தூக்கு மரத்தில் அவர் மாண்டு பட்டார்” என இவ்வாறு அந்த வெள்ளேத் அதுரை உள்ளங் திறந்து உண்மையை வெளியிட்டிருக்கிரு.ர். தேசத் தியாகிகள் இந்த ஆங்கில வாசகத்தை ஊன்றி நோக்கி உணரவேண்டும். உண்மையை ஒர்ந்து தெளிவது நன்மையாம்.

இக் காட்டின் சுதந்திரத்திற்காகவே அயல் நாட்டாரோடு மூண்டு போராடி காலாயிரம் பேர்களேப் போரில் பலிகொடுத்து அரசு முழுவதும் இழந்து அடியோடு இவ் வீரர் மாண்டு போயுள்ளார். இமயம் முதல் குமரிவரை இந்தியாவில் யாரும் இவ்வாறு ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடியதில்லை. நேரு முதலிய நமது தேசத் தலைவர்கள் இந்த வீர சரித்திரத்தின் உண்மையை நேரே உணர நேர்ந்தால் உள்ளம் உருகி உவந்து போற்றுவர். உரிமையை ஒர்ந்து கடமையைத் தேர்ந்து ஞானம் விரம் மானம் நேர்மை முதலிய நீர்மைகள் தோய்ந்து இத் தேசம் சீர்மையாய் வாழ்ந்து வர ஈசன் அருள் புரிய வேண்டும்.

திருவள்ளுவர் நிலையம், மதுரை. ஜெகவீரபாண்டியன்.

16–4–1954.