பக்கம்:பாஞ்சாலி சபதம்-ஒரு நோக்கு.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவியத்தில் உருக்காட்சிகள் 125 என்ற அடிகளைப் படிக்கும்போது தயில வகைகளின் வாசனையும் கஸ்துரியின் நறுமணமும் நம்மூக்கைத் துளைப் பதாக உணர்கின்றோம். தொடுபுல நெப்டில) உருக்காட்சிகள் இந்த நுண்ணிய உருக்காட்சிகள் காவியத்தில் அமைந்து காவியத்திற்குப் பொலிவூட்டுகின்றன. துரியோதனனின் பொறாமைத் தீயை வருணிக்கும் கவிஞர், குன்ற மொன்று குழைவுற் றிளகிக் குழம்பு பட்டழி வெய்திடும் வண்ணம் கன்று பூதலத் துள்ளுறை வெம்மை காய்ந்தெழுந்து வெளிப்படல் போல என்று கூறும்போது வெப்ப உணர்ச்சி தட்டுப்படுகின்றது. பொறாமையைத் தீ என்று உருவகித்ததைப் போலவே சினத்தையும் தீ என்று உருவகிப்பார் பாரதியார். இன்ப நிகழ்ச்சிகளில் பொழுது போக்குமாறு தந்தை கூறுவதைச் செவிமடுத்த சுயோதனன்சினங்கொள்ளுகின்றான். கோமகன் வெந்தழல்போலச் சினங் கொண்டே-தன்னை மீறிப் பல சொல் விளம்பினான்' என்று இதனைக் கவிஞர் கூறும் போதும், நெஞ்சைத், தின்னும் கொடுந்தழல் கொண்டவர்சொல்லுஞ் செய்தி தெளிய உரைப்பரோ என்ற சகுனியின் பேச்சிலும் இந்த வெப்பத்தை நம் மனம் உணர்கின்றது. சகுனி தருமனிடம் அவனுடைய சகோதரர்களைப் பணயப் பொருளாக வைக்குமாறு கூறியதைக் கேட்டு, கங்கை மைந்த னங்கே-நெஞ்சம் கனலுறத் துடித்தான்; பொங்கு வெஞ்சினத்தால்- அரசர் புகையுயிர்த் திருந்தார்’ 7. டிெ 3.44:228.