பக்கம்:பாஞ்சாலி சபதம்-ஒரு நோக்கு.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 பாஞ்சாலி சபதம்-ஒருநோக்கு பெருங்காப் பியநிலை பேசுங் காலை வாழ்த்து வணக்கம் வருபொருள் இவற்றினொன்(று ஏற்புடைத் தாகி முன்வர இயன்று நாற்பொருள் பயக்கும் நடைநெறித் தாகித் தன்நிகர் இல்லாத் தலைவனை யுடைத்தாய் மலைகடல் நாடு வளநகர் பருவம் இருசுடர் தோற்றம் என்(று) இனையன புனைந்து நன்மணம் புணர்தல் பொன்முடி கவித்தல் பூம்பொழில் நுகர்தல் புனல்விளை யாடல் தேம்பிழி மதுக்களி சிறுவரைப் பெறுதல் புலவியிற் புலத்தல் கலவியிற் களித்தல் என்(று) இன்ன புனைந்த நன்னடைத் தாகி மந்திரம் தூது செலவு இக(ல்) வென்றி சந்தியில் தொடர்ந்து சருக்கம் இலம்பகம் பரிசசேதம் என்னும் பான்மையின் விளங்கி நெருங்கிய சுவையும் பாவமும் விரும்பிக் கற்றோர் புனையற் பெற்றிய தென்ப, என்று கூறும் மற்றும், கூறிய உறுப்பில் சில குறைந்து இயலினும் வேறுபாடு) இன்(று)என விளம்பினர் புலவர்." என்ற புறநடையும் தரும். மேலும், ஒருதிறப் பாட்டினும் பலதிறப் பாட்டினும் உரையும் பாடையும் விரவியும் வருமே." என்று காட்பியங்களின் யாப்பைக் குறித்துப் பேசும். உரை நடையும் பாநடையும் விரவி வரும் காப்பியத்தைத் தொல் தண்டி - நூற்பா-8, 9-.gو@ டிெ-11