பக்கம்:பாஞ்சாலி சபதம்-ஒரு நோக்கு.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிற காவிய மாந்தர்கள் 홍 மெய்சோர்ந்து தரையில் வீழ்கின்றான். இதனைக் காணும் வீமன்தான் முதலில் சபதம் செய்கின்றான்: -:இங்கு விண்ணவ ரானை பராசக்தி யானை, தாமரைப் பூவினில் வந்தான்-மறை சாற்றிய தேவன் திருக்கழ லாணை; மாமகளைக் கொண்ட தேவன்-எங்கள் மரபுக்கு தேவன் கண்ணன் பதத்தானை; காமனைக் கண்ணழலாலே-சுட்டுக் காலனை வென்றவன் பொன்னடிமீதில் ‘ஆணையிட் டிஃதுரை செய்வேன்;-இந்த ஆண்மை யிலாத்துரி யோதனன் தன்னை பேணும் பெருங்கன லொத்தாள்-எங்கள் பெண்டு திரெளபதி யைத்தொடைமீதில் நாணின்றி வந்திரு” என்றான்-இந்த நாய்ம்க னாந்துரி யோதனன் தன்னை; மாணற்ற மன்னர்கண் முன்னே,-என்றன் வன்மையி னால்யுத்த ரங்கத்தின் கண்ணே, "தொடையைப் பிளந்துயிர் மாய்ப்பேன்;-தம்பி சூரத்துச் சாதனன் தன்னையு மாங்கே கடைபட்ட தோள்களைப் பிய்ப்பேன்;-அங்கு கள்ளென ஊறும் இரத்தம் குடிப்பேன்; நடைபெறுங் காண்பி ருஸ்கீர்!--இது நான்சொல்லும் வார்த்தை என்றெண்ணிடல் வேண்டா! நடையற்ற தெய்வத்தின் வார்த்தே!-இது சாதனை செய்க பராசக்தி' என்றான்.' 32. സ്കൂ, 5, 7 {: 303-305 பாடு