பக்கம்:பாடு பாப்பா.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



ஓடும் ஓடும் ஓடை
       ஒவ்வோர் நொடியும் ஓடும்
பாடும் பாடும் இசையே
       பகலும் இரவும் பாடும்!

பயிருக் குணவாம் நீரைப்
       பாய்ச்சிக் கொண்டே ஓடும்
உயிர்கள் வாழ்க என்றே
       உரத்த குரலில் பாடும்!

தங்கக் கதிரின் ஒளியில்
       தகதகக்கும் ஓடை
எங்கும் பசுமை தவழ
       எழில் பெருக்கும் ஓடை!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடு_பாப்பா.pdf/29&oldid=1314666" இலிருந்து மீள்விக்கப்பட்டது