இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பாம்பே பாம்பே நல்ல பாம்பே!
படமெடுத் தாடும் நாகப் பாம்பே
இத்தனை யழகாய் இருக்கும் நீதான்
ஏனோ நஞ்சை வைத்திருக்கின்றாய்?
மகுடி யிசையைக் கேட்டுக் கேட்டு
மகிழ்ந்து கூத் தாடு கின்றாய்
வெகுளி கொண்டாய் நச்சுப் பல்லால்
வேதனை சேரக் கொட்டுகின்றாய்!
அற்ப சினத்திற் குயிரைக் குடிக்கும்
ஆகாச் செயலைச் செய்யும்உனக்கே
ஆட்டம் எதற்குத் தடியை எடுத்தோம்
ஓட்டம் எடுப்பாய்! ஓஓ போவாய்!