பக்கம்:பாடு பாப்பா.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



கோயிலுக்குப் போவோம்
        குறைக ளின்றி வாழத்
தூய நெஞ்சத் தோடு
        தொழுது வணங்கி நிற்போம்!
 
ஏழை மக்கள் வாழ
        இறைவா அருளைப் புரிவாய்!
கோழை மக்கள் நிமிரக்
        கொடுப்பாய் அன்பு வரங்கள்!

நேர்மை யுள்ள மனத்தில்
        நிற்பான் என்றும் ஈசன்
வேர்வை சிந்து வோரை
        விரும்பிக் காப்பான் ஈசன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடு_பாப்பா.pdf/35&oldid=1314510" இலிருந்து மீள்விக்கப்பட்டது