இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
வள்ளுவர் செய்த திருக்குறளைப்
படித்தோர் அறிஞர் ஆவாரே!
அள்ளி யள்ளி யுண்டிடவே
அறிவுப் படையல் படைத்தாரே!
திருக்குறள் கற்றால் நெஞ்சத்தில்
தெளிவு பிறக்கும்! வாழ்க்கையிலே
இருக்கிற இன்பம் அத்தனையும்
எளிதில் கிடைக்கும் ஆமாமாம்!
வள்ளுவர் செய்த திருக்குறளை
வாங்கிப் படிப்போம் வாவாவா!