பக்கம்:பாட்டுத் திறன்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல்-8 கவிதையின் இலக்கணம் கவிதை என்றால் என்ன? வினா மிகவும் எளியதுதான். ஆனால், அதற்கு விடையிறுப்பதோ மிகவும் கடினம். கவிதை யின் இலக்கணத்தை மேற்புல அறிஞர்கள் வரையறுத்துக் கூற முயன்றுள்ளனர். ஆனால், அவர்கள் வெற்றியடைந்திலர். 'கவிதை யென்பது ஒலிநயம் அமைந்த சொற்களின் கட்டுக் கோப்பு: அஃது இன்பத்தை உண்மையுடன் இணைப்பது; அறிவுக்குத் துணையாகக் கற்பனையைக் கொண்டிருப்பது' என்பது ஜான்ஸன் என்பாரின் கூற்று. கார்லைல் என்பார், 'இசை தழுவிய எண்ணமே கவிதை' என்று வரையறுப்பர். 'மனிதச் சொற்களால் அடைய முடிந்த மகிழ்வூட்ட வல்லதும் செம்மை கிறைந்ததுமான கூற்றே கவிதையாகும்' என்பது மாத்யூ ஆர்னால்டு என்பார் கவிதைக்குக் கூறும் இலக்கணம். இங்ங்னம் மேற்புல அறிஞர்கள் கூறியவை அனைத்தும் கவிதை யின் இலக்கணத்தைத் திட்டமாக வரையறுக்க முடியவில்லை. இனி, நம் காட்டு அறிஞர்கள் கூறுவதையும் காண்போம். சீதாபிராட்டியின் அழகை வருணிக்கப் புகுந்த கம்பாாடன் பொன்னின் சோதி, போதின் காற்றம், தேனின் தீஞ்சுவை என்று ஒவ்வொன்றாகக் சொல்லிப் பார்க்கின்றான். ஒன்றுகூட அவன் சீதையைப்பற்றிக் கொண்டிருந்த கருத்தை வெளியிடும் ஆற்றல் பெறவில்லை. இறுதியில், 'செஞ்சொற் கவியின்பம்’1 என்று சொல்லி மனநிறைவு பெறுகின்றான். உள்ளத்திலுள்ள வற்றை உணர்ச்சி பொங்கத் தெள்ளத் தெளிந்த சொற்களால் எடுத்துரைப்பதுதான் கவிதையாகும். கவிமணியவர்களும், 1. பால . மிதிலை செய். 28