பக்கம்:பாட்டுத் திறன்.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#66 பாட்டுத் திறன் கற்பிளவிலே அரிய பெரிய முழு மணிகள் அடுக்கடுக்காய்க் கிடந்து எடுக்குந்தோறும் குறைபடாதிருத்தலே பெரிதும் வியக் கற்பாலதாகும். சிறிய வான்மீன்கள் அகன்ற அவ்வானத்திற் காணப்பெறுதல் ஒரு வியப்பன்று; அவ்வகன்ற வானும் வேறு மாடமாளிகை கூடகோபுரங்களும் ஒரு சிறிய கண்ணாடியினுட் காணப்பெறுதலே மிகவும் வியக்கற்பாலதாம். இதுபோலப பெரிய ஓர் உரையிலே சில பொருளேனுங் காணப்பெறு தல் வியப்பினை விளைவியாது. மற்றுச் சிறியதொரு பாட்டிலே பல திறப்பட்ட ஆழ்ந்த பொருளெல்லாம் காணப் பெறுதலே வியக்கற்பாலது. உரையில் ஒருவரையறை யின்மையினால்ே பொருட்கு வேண்டுவனவும் வேண்டாதனவுமான பல சொற்கள் கிரம்பி கின்று வியப்பினைத் தாராவாய்த் தாமெடுத்த பொருளை மாத்திரம் நம்மறிவுக்குப் புலங்கொள விளக்கி யொழிகின்றன. மற்றுச் செய்யுளிலோ பொருட்சாரமான சொற்கள் மாத்திரம் ஆய்ந்தமைக்கப் பெறுகின்றன வாகலின் அச்சொற்கள் கொண்ட பொருட்கருவை அறியப் புகுவானொருவன், தன் அறிவால் அதனைக் கூர்ந்தறிய வேண்டுதலின் தன்னறிவு மிக துனுகப் பெறுதலோடு அச்சிறிய சொல்லிற் பெரிய பொருளடங்கி கிற்றலை அறிந்த மாத்திரையினாலே தன்னையறியாதொரு வியப்பு முடனெய்தி, அதன்கண் ஒர் இன்பக்தோன்ற அதன் வயப்பட்டுச் சிறக்கின்றான். ஆகவே, பாட்டு ஒன்றுமே உயிர்கட்கு அறிவை விளக்கி அதற்கும் மேற்பட்ட உணர்வை எழச் செய்து இன்பம் பயப்பதொன்றாய் நிலை பெறுகின்றது. உரைப்பயிற்சியில் அறிவு மாத்திரம் விளக்கம் எய்துமே யல்லது உணர்வின் வழித் தான இன்பக் தோன்றுதல் இல்லை யென்க. அல்லது உம், உரை யெல்லாம் இயற்கையிலேயே இசை தழுவாது கடப்பனவா மாகலின் அவை உணர்வை எழுப்புமாறு எவ்வாற்றானு மில்லை யென்க. பாட்டுகளோ இயற்கையாகவே இடங்கட்கு ஏற்றபெற்றி யெல்லாம் பலதிறப்பட்ட இசை தழுவி நடக்குமாகலின் அவை உயிருணர்வை எழுப்புதற்கட் பின்னுஞ் சிறப்புடையவாம். (Fಣ6T? இசையைக் கேட்டு உருகாத பொருள் உலகத்தில்லை யின்றே? உலகியல் சிறிது மறியாத மகவை அன்னை தொட்டிலிற் கிடத்தித் தாலாட்ட அஃதவ்விசையா லின்புற்று' உறங்கல் கண்டாமன்றே கொடிய விலங்கினங்களும் கச்சுயிர்களும் புல்லர்ங்குழலோசை கேட்டவளவுானே. தந்தொழில் w றந்து