பக்கம்:பாட்டுத் திறன்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுத் திறன் f6? இன்புற்றுத் தன் வயமழிதல் தெளியப்பட்ட தொன்றன்றோ? இதன்மாட்சி இனிது அறிவுறுத்தற் கென்றே மாணிக்கவாசகப் பெருமான் திருச்சிற்றம்பலக் கோவையாரில், சிறைவான் புனற்றில்லைச் சிற்றம்ப லத்துமென் சிந்தையுள்ளும் உறைவான் உயர்மதிற் கூடலின் ஆய்ந்தவொண் தீங்தமிழின், துறைவாய் நுழைந்தனை யோ? அன்றி ஏழிசைச் சூழல்புக்கோ? இறைவா! தடவரைத் தோட்கென்கொ லாம்புகுந் தெய்தியதே' என்று திருவாய் மலர்ந்தருளினர். இப்பெற்றித்தான இசை தானேயும் இன்புறுத்துகின்ற பாட்டோடுஞ் சேருமாயின் அவை யிரண்டின் கலப்பாற் றோன்றும் இன்பம் இவ்வியல்பிற் றென்று குறித்துரைக்கல் ஏலுமோ? எனவே, இசையொடு பிணைக் தியங்கும் பாட்டிற்கும் அஃதின்றி யியங்கும் உரைக்கும் உள்ள வேறுபாடும், இவ்விரண்டில் முன்னையது பயன் பெரிதுடைத்தா தலும் பின்னையது பயன் சிறிதே யுடைத்தாதலும் தெற்றென விளங்கா கிற்கும். அற்றன்று. உரை நூல்களும் ஒரோவழி வியப்புணர்வு தரக்காண்டுமாகவின் அதனைச் செய்யுளுக்கே வரைந்து கூறியது பொருந்தாதாம் பிறவெனின்: கன்று கடாயினாய், ஒரோவோருரை நூல்களின் இடையிடையே பாட்டிற்குரிய சொல்நயம் பொருள் இயங்கள் காணப்பெறு தலால் அங்ங்னம் இவ்வியப்புணர்வு தோன்றிற்றாகவின் அது பற்றி ஈண்டைக்காவதோர் இழுக்கில்லை என்பது. இப்பெற்றிப் பட்ட உரைப் பகுதிகளில் சில ஆசிரியர் நக்கீரனார் களவிய லுரையினிடையிடையே காணப்பெறும்; அவை கொண்டு இவ் வுண்மை அறியற் பாற்றாம்.' - இதை மேலும் திருக்கோவையாரிலுள்ள ஒரு முழு மணியை எடுத்துக்காட்டி விளக்குகின்றார் ஆசிரியர் மறைமலை •ಣ್ಣಿಹಣಿ! 20. செய்யுள்-20. 21. மறைமலையடிகள் : பட்டினப்பாலை ஆராய்ச்சியுனை : பக்-11-10)