பக்கம்:பாட்டுத் திறன்.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுத் திறன் 1?? இயைபுக் கற்பனை, கருத்து விளக்கக் கற்பனை என்று மூன்று வகையாகப் பாகுபடுத்திப் பேசுவர். இவை ஒவ்வொன்றையும் எடுத்துக்காட்டுகளால் விளக்குவோம். - படைப்புக் கற்பனை : வாசவதத்தையின் அழகினைக் குறித்துக் கொங்குவேளிர் இவ்வாறு கூறுவர்: யாற்றற லன்ன கூந்தல், யாற்றுச் சுழியெனக் கிடக்த குழிகவில் கொப்பூழ், வில்லெனக் கிடந்த புருவம்; வில்லின் அம்பெனக் கிடந்த செங்கடை மழைக்கண், பிறையெனச் கடரும் சிறுநுதல்; பிறையில் கிறையெனத் தோன்றும் கறையில் வாண்முகம், அரவென துடங்கும் மருங்குல், அரவின் பையெனக் கிடந்த ஐதேக் தல்குல், கிளியென மிழற்றும் கிளவி, கிளியின் ஒளிபெறு வாயின் அன்ன ஒள்ளுகிர், வாழையங் தாளுறழ் குறங்கின் வாழைக் கூம்புமுகி ழன்ன வீங்கிள வனமுலை, வேயெனத் திரண்ட மென்றோள்; வேயின் விளங்குமுத் தன்ன துளங்கொளி முறுவல், காந்தள் முகிழன்ன மெல்விரல்; காந்தள் பூந்துடுப் பன்ன புனைவளை முன்கை அன்னத் தன்ன மென்னடை." இது கேசாதி பாதவருணனை. இதில் கவிஞன் தான் பல சமயங்களில் கண்டவற்றை ஒருங்கு சேர்த்துப் புதிய உருவத்தைப் படைத்திருப்பதைக் காண்க. இங்ங்ணம் கவிஞன் ஒருவன் தன் அநுபவத்தில் கண்ட பல பண்புகளை ஒருவிதக் கட்டுப்பாடுமின்றித் தானாகத் தேர்ந்தெடுத்து அவற்றினைத் தொடுத்துப் புதியதொரு வடிவினைப் பட்ைப்பது படைப்புக் கற்பனையாகும்." மேலே கண்ட காட்சியில் புதியதொரு பண்பு 7. C. T. Winchester. 8. வேய் மூங்கில் 9. பெருங்கதை 4-11:34.11. 10. The creative imagination spontaneously selects among the elements given by experience and Combines them into new wholes. If this combination be arbitrary or irrational, the faculty is called Fancy.—Some Principles of Literary criticism by C, T. Winchester, P-145. பா-13