பக்கம்:பாட்டுத் திறன்.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

260 . பாட்டுத் திறன் இரும். ஆங்கிலத்தின் எதுகை இல்லாப் பாட்டாகிய biank verse க்கு ஒருவகையில் சமமாகவுள்ள தமிழ் அகவற்பாட்டிலும் மோனை இல்லாமல் பாட்டு இயற்றப் பெறுவதில்லை. நீல மேனி வாலிழை பாகத்து ஒருவன் இருதாள் கிழற்கீழ் மூவகை உலகும் முகிழ்த்தன முறையே." என்ற பாடலில் முதல் இரண்டு அடிகளில் எதுகை மட்டிலும் அமைந்து மோனை இல்லாதிருப்பதையும், அந்தக் குறையைப் போக்கும் வகையில் மூன்றாம் அடியில் மூன்று சீர்களில் மோனை அமைந்துவிட்டதையும் காண்க. பாவினங் களைப் பொறுத்தவரையிலும், சிறப்பாக விருத்தப் பாக்களில், மோனை இன்றியமையாது அமைவதைக் காணலாம். பணம்பணமென் றனுதினமும் படுபேயாய்ப் பறந்தோடிப் பரித பித்துக் கணம்தரியா துழல்கின்றார் காலன்வரு கணங் தெரியார் கரவே சூழ்ந்து குணக்தெரியா தழிமதியே கொண்டாடிக் குருட்டாட்டம் கொள்ளுகின்றார் பிணங் தெரியப் பெறுநாளில் பெறுவதனை கினையாமல் பிழைக்கின் றாரே, இந்த விருத்தப் பாடலின் ஒவ்வொாடியிலும் பணம்-படு பேய்-பறத்தோடி-பரிதபித்து, -- கணம்-காலன்- கணக்தெரி யார்-தரவே, குணம்- கொண்டாடி - குருட்டாட்டம்கொள்ளுகின்றார், பிணம்-பெறுகர்-பெறுவ - பிழைக்கின் றாரே என்றுமோனை வந்திருப்பதை அறிக. இதற்குத் தொட்ட இடமெல்லாம் எடுத்துக்காட்டுகள் எளிதில் கிடைக்கும். துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய துர2-ம் மழை என்ற குறளின் முதலடியில் எல்லாச் சீர்களிலும் முதலெழுத்து ஒன்றிவந்துள்ளதைக் காண்க. இது முற்றுமோனை' 8. ஐங்குது தனது கடவுள் வாழ்த்து. 8. செகவீர பாண்டியனார் ; வீரபாண்டியம் செய் -891, ? குறள்-12, - .