பக்கம்:பாட்டுத் திறன்.pdf/375

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

364 பாட்டுத் திறன் அகப்பட்டுக் கொண்டவர்கள் அவர்கள் மட்டுமல்-ை வெறி பிடித்த இராவண விலங்கும் அதில் பிடிபட்டு விட்டது. இதில் காதல், வலை, விலங்கு இச்சொற்கள் துல்லியமாகவும் தெளிவாகவும் கருத்தினைப் புலப்படுத்துவதைக் கண்டு மகிழலாம். 'மழை என்ற தலைப்பில் ஒரு கவிதை. வானிலை ஜாதகத்தைப் பார்த்து. வானொலி ஜோஸ்யர் சொல்லும் பலனை - பொய் என்று நிரூபிக்கும் பகுத்தறிவு வாதி! 'மழை ' என்ற தலைப்பில் இன்னொரு புதுக்கவிதை : வான ஆடையிலிருகது கிழிந்து பிரிந்து வந்த நீர் நூலகள் இயற்கைக் கணவனின் இடி உதையைத் தாங்க முடியாமல் வான மனைவி வடிக்கின்ற கண்ணிர்த் துளிகள்... வானத்தாய் கொத்தாகப் பெற்றுப் பூமிக்குத் தத்தாகத் தந்த 9. பொய்க்கால் குதிரைகள்-பக்-109 10.