பக்கம்:பாட்டுத் திறன்.pdf/376

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுத் திறன் 365 முத்துப் பிள்ளைகள் மேகம் அனுப்பிய துாதை மண்ணுக்குக் கொண்டு வரும் தந்திக்கம்பிகள். எழுதியது பி. சுப்பிரமணியன்.கற்பனை நிறைந்த கல்ல கவிதை. துல்லியமும் தெளிவும் இணைந்து இதில் கொஞ்சுவதைக் காண்க. ‘விருட்சங்கள்' என்பது பற்றிவரும் கவிதை : காற்றுப் பிச்சைக்காரன் காதைக் கிள்ளும் போதெல்லாம் தலையாட்டிக் கொண்டிருக்கும் பெருமாள் மாடுகள். மண்ணரசி . மடக்காமலேயே பிடித்துக் கொண்டிருக்கும் பச்சைக் குடைகள். "கிரோத்' என்ற தலைப்பில் ஒரு கவிதை : 11. 12. நாள்தோறும் பள்ளியில் நூலிடையில் புழங்கினாலும் - பிள்ளைத் தமிழை மட்டும் படிக்கப் பிரியப்படாத மாணவன்... கட்டில் தியேட்டரில் காட்டப்படும் சினிமாவில் - தாலாட்டுப் பாடல்களை மட்டும் இக்கச் சொல்லும் தணிக்கை அதிகாரி விதைவெள்ளம் ਾਂ