36 பாட்டுத் திறன் தெளிவும், நுட்பமும் பெற வேண்டியனவாக உள்ளன.” மொழி யிலுள்ள சொற்களின் குறைவும், பலவகைப் பொருள்களை உணர்த்துவது போன்ற குறையும் இருத்தலால்தான் கவிதையின் சொற்கள் மேற்கூறியவாறு அமைகின்றன. எதிலும் உண்மை யான ஈடுபாடு இருப்பின் எளிய சொற்களைக் கொண்டே அரிய அநுபவத்தையும் உணர்த்தல் இயலும். படிமங்கள். பாட்டதுபவமாதற்கு அதில் கவிஞன் கை யாண்டுள்ள படிமங்களும் ஓரளவு துணைசெய்கின்றன. புலன் கட்கு முறையீடு செய்வதற்கேற்பப் படிமங்கள் கட்புலப் படிமங்கள், செவிப்புலப் படிமங்கள், சுவைப்புலப் படிமங்கள், காற்றப்புலப் படிமங்கள், கொப்புலப் படிமங்கள், இயக்கப் புலப்படிமங்கள், மரபுவழிப்படிமங்கள் என்று வகைப்படுத்தப் பெற்றுள்ளன. ஒரு கவிதையில் இவை தனித்தனியாகவும் வரலாம்; ஒன்றுக்கு மேற்பட்ட எண்ணிக்கையில் கலந்தும் வரலாம். எடுத்துக்காட்டாக. மந்திர கீதம் முழங்கினர் பார்ப்பனர்; வன்தடங் தோள்கொட்டி ஆர்த்தனர் மன்னவர்; வெந்திறல் யானையும் தேரும் குதிரையும் வீதிகள் தோறும், ஒளிமிகச் செய்தன: வந்தியர் பாடினர்; வேசையர் ஆடினர்; வாத்தியம் கோடி வகையின் ஒலித்தன88 என்ற பாடலைக் காட்டலாம். பாண்டவர்கட்கு அத்தின புரத்தில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியினை வருணிக்கும் சொல்லோவியம் இது.இங்கு மந்திர கீத முழக்கம் தோள்கொட்டி ஆர்த்தல், வந்தியர் பாடுதல், வாத்தியம் ஒலித்தல் இவை செவிப் புலப் படிமங்கள்; யானை, தேர், குதிரை வீதிகள்தோறும் ஒளி செய்தல்-இது கட்புலப் படிமம். இவையாவும் கலந்த கலவை நிலைப் படிமம் நிகழ்ச்சியை மனத்தில் நன்கு பதிக்கின்றது. இன்னோர் எடுத்துக்காட்டு : சிறுகுழந்தை விழியினிலே ஒளியாய் கின்றாள்; திருவிளக்கில் சிரிக்கின்றாள், காரெடுத்து கறுமலரைத் தொடுப்பாளின் விரல்வளைவில் நாடகத்தைச் செய்கின்றாள், அடடே! செங்தோட் 32. Abercrombie. L. Principles of Literary Criticism p.39 33. பா, ச. 1. 29:56