பக்கம்:பாட்டுத் திறன்.pdf/395

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

384 பாட்டுத் திறன் 10. முது கன்னியர்கிலை இன்று வரதட்சிணை காரணமாக எத்தனையோ மகளிர் முது கன்னியராக வாழ்கின்றனர். இவர் தம் திருமணம் கானல் ரோகக் காணப் பெறுகின்றது. ஒரு கெளதமன் வாரானோ?' என்ற தலைப்பிலுள்ள ஒரு கவிதை இவர்களின் குரலாக அமைகின்றது. காங்கள் காகுத்தர்களை எதிர்பார்த்துக் கற்களாய்க் கிடக்கின்ற அகலிகைகள் அல்ல. கமண்டலத்து நீரை எடுத்து 'கல்லாய்ப் போ:எனச் சபிக்கப்பட்ட... ஒரு கெளதமனை எதிர் பார்த்துக் கிடக்கும் பாரத புத்திரிகள்! பர்த்தா ஒருவன் இருக்கும் போதேபிற புருஷனை இச்சித்த ரிஷி பத்தினியல்ல គេមោះ៖៩r ஒரு பர்த்தாவே லபிக்காத கன்யாஸ்திரீகள். புக்ககம் என்ற பட்டியில் அடைக்கப் படுவதற்காகவேபடைக்கப் பட்ட ஆடுகள் நாங்கள்... இந்த ஆடுகள்வைரத் தோடுகளோடு வந்தாலே யன்றி. எந்தப் பட்டியும் ஏற்கச் சித்தமாக இல்லை... 22. போய்க்கால் குதிசைகள் பக். 121