பக்கம்:பாட்டுத் திறன்.pdf/436

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுத் திறன் 435 ஈரடியால் முறை திறம்பா வகை முடியத் தன்னுலகம் ஆக்கு வித்த புராணச் செய்தியை அடிப்படையாகக் கொண்டு, ஓர் அடியை முதலாளித்துவ முடிமேல் வைத்து ஒர் அடியை கிலப் பிரபுத்துவ கெஞ்சில் ஊன்றி... ஓர் அடியை அதிகார வர்க்கத்தின் முகத்தில் இட்டு மூவடியால் முறைமை செய்ய எழுகின்றது! என்ற பகுதி அமைகின்றது. இங்குப் பரிணாமம் புகங்களை ஒரு முடிச்சின் அவிழ்ப்பில் அடையத் துடிக்கின்றதாகப் புலப் படுத்துகின்றார் கவிஞர். இப்போக்கு புரட்சிப் போக்கில் செல்லுகின்றதையும் தெளிவாக்குகின்றார். ‘கவிதை வாழ்க்கையிலிருந்து மலர்கின்றது' என்பர் ஆங்கிலத்திறனாய்வாளர். மார்க்சியப் பாணியில் வாழ்க்கை அமைய வேண்டுமெனறு சில சிந்தனையாளா கனவு காண் கின்றனர். வருங்காலத்தில் அமைய வேண்டிய வாழ்க்கையைப் பற்றிய சிந்தனையே கவிதைகளில் வழிகின்றது.